பொங்கு மலை எங்கிருந்து பொருமி வந்தாலும்
அங்கெல்லா மெங்கள் தமிழ் மணங் கமழுமையா!
கடந்த கால நடைமுறைகள் எமக்குக் கற்றுத்தந்த பாடம்தான் என்ன? இலங்கையின் இனப் பிரச்சனைக்கான தீர்வுகள், வெறுங்கனவுகளோ?!... என்று, எண்ணத்தோன்றுகின்றது.
இலங்கையில் தமிழர்களின்...
More
பொங்கு மலை எங்கிருந்து பொருமி வந்தாலும்
அங்கெல்லா மெங்கள் தமிழ் மணங் கமழுமையா!
கடந்த கால நடைமுறைகள் எமக்குக் கற்றுத்தந்த பாடம்தான் என்ன? இலங்கையின் இனப் பிரச்சனைக்கான தீர்வுகள், வெறுங்கனவுகளோ?!... என்று, எண்ணத்தோன்றுகின்றது.
இலங்கையில் தமிழர்களின் உயிர்ச் சேதத்தையோ, வாழ்க்கைச் சிதைவினையோ யாரும் எண்ணிப்பார்த்ததாக இல்லை.
அவரவர் தமது தேவைகளையும், இலாபத்தையும் காத்துக்கொள்வதோடு, தமக்கு முக்காடும் போட்டுக்கொள்கின்றனர்.
இலங்கை அன்னையின் இரத்தக்கறையும், வியர்வைத்துளியும் துடைக்கப்பட வேண்டுமென்றால், இரு பிரிவினரும் ஒரேயொரு கட்டமைப்புக்குள் வந்தாலொழிய பிளவுகள் தீர்க்கப்படப் போவதில்லை.
2003ல் வெளியிடப்பட்ட “அநுபூதி” என்னும் நூலில் குறிப்பிடும் “சாகடிக்கப்படும் சரித்திரம்” என்ற பகுதியில் தமிழரின் வரலாறு பற்றிச் சற்றுச் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது.
மழுங்கடிக்கப்பட்ட சரித்திரத்தை மீட்டெடுக்கவேண்டிய கடப்பாடு யாருக்குண்டு? அநுப+தித்தனமான எழுத்தாளரை எப்படி இனங்கண்டு கொள்வது? இவையெல்லாம் தொடுக்கப்பட வேண்டிய வினாக்களல்ல செயற்பட வேண்டிய அனர்த்தங்கள்.
2006ல் நின்று பார்க்கும
Less